விஜய் டிவியின் பிரைம் டைம் எபிசோடில் மிக பயங்கரமாக கலக்கி வருகிறது பாக்யலட்சுமி தொடர். இந்த தொடரில் கோபி, பாக்யா, ராதிகா ஆகியோரின் கதை ரசிகர்களுக்கு கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
கோபி கதாபாத்திரம் பாக்யலட்சுமி மற்றும் ராதிகா இருவரது உணர்வுகளையும் மிக பயங்கரமாக காயப்படுத்திவிட்டு இப்போது பறிதவிப்பது ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு ஜாலியாக இருந்தாலும், பாக்யாவுக்காக அவர்கள் வருத்தப்படுகின்றனர்.
ராதிகாவை சமாதானப்படுத்தும் வகையில் பல வித எமோஷ்னல் சீன்களை உருவாக்கி நடத்திய கோபியை அவர் நம்பவே இல்லை. கடைசியாக உனக்காக நான் செத்துடுவேன் எனவும் கூறுகிறார். இதை வாய்ஸ் மெசேஜாக அனுப்ப அதை மயூ, ராதிகாவிடம் காண்பிக்கிறார்.
பதிலுக்கு மயூவை திட்டுகிறார் ராதிகா. அது வாய்ஸ் மெசேஜாக கோபிக்கு சென்றுவிட, அதை பாக்யா எடுத்து பார்க்க, கோபி கத்த என களேபரமாக போகிறது சீரியல்.
இந்நிலையில் ராதிகா தான் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு மும்பைக்கு சென்று செட்டில் ஆக இருப்பதாக கூறுகிறார் ராதிகா. இதனால் அதிர்ச்சி நிறைந்த எபிசோட்கள் காத்திருக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…