விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி தொடரின் மூலம் அறிமுகமானாலும் பின்னர் பகல் நிலவு, வள்ளி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழக மக்களிடையே மிகப் பிரபலமானார்.
ஆனால் என்ன நடந்ததோ இடையில் அவர் நடித்து வந்த அனைத்து தொடர்களிலிருந்தும் நீக்கப்பட்டார். இதனால் அவருக்கு என்ன ஆயிற்று. சினிமாவில் நடிக்கிறாரா என்ன நடக்கிறது என புரியாமல் இருந்தனர். பின்னர் சில மாதங்களில் சிம்புவைத் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
பலரும் இவர் பிரபலத்துக்காக இப்படி சொல்கிறார். விளம்பர பிரியை என கூறினர். ஆனால் இவருக்கு மன அழுத்தம் பிரச்னை இருப்பதாகவும் அதனால் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்கள். இதனிடையே மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் நடிகை ஸ்ரீநிதி.
எனினும் அவரைக் காப்பாற்றிவிட்டனர். மன அழுத்தத்துக்கான சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…