கோபிக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் அவன் அந்த பெண்ணுடன் வாழ்ந்து வருவதும் மொத்த குடும்பத்துக்கு தெரிய வந்துவிட்டது, இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு கதையில் தொற்றிக்கொண்டுள்ளது. கோபியின் தண்டவாளங்கள் அனைத்தும் தெரிய வர, அவனை நிற்க வைத்து கேள்வி கேட்கின்றனர்.
பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கும் பரிதாப நிலையில் கோபி நிற்க, ரசிகர்கள் வேண்டும் இவனுக்கு இது பத்தாது இன்னும் நிறைய வேணும் என நினைக்கு மைண்ட் வாய்ஸ் புரிகிறது. அப்போது கோபிக்கு ஒரு லெட்டர் வர, அதை கோபியின் மகன் எழில் எடுத்து பிரித்து படிக்கத் தொடங்குகிறான்.
அவன் படித்து ஷாக் ஆகி, இதனை அவனது பாட்டியிடம் சொல்ல, கடும் கோபத்தில் இருந்த கோபியின் அம்மா கோபியை பளார் என அறை விடுகிறார். மேலும் தனது பங்குக்கு கோபியின் அப்பா இந்த விசயம் எனக்கு முன்னரே தெரியும், அதை தெரிந்து கொண்ட நான் மாடிப்படியில் இருந்து விழுந்து அடிபட்டதைப் பார்த்துக் கொண்டே நின்ற கோபி, அதற்காக சந்தோஷப்பட்டான் என தெரிவிக்க, அனைவரது முகத்திலும் கடும் கோபம் தீப்பற்றி எரிந்தது.
இவ்வளவு நடந்த பிறகும் இந்த வீட்டில் அமைதியாக வாழ்வதா, வெளியேறி தனியாக வாழ்வோம் என சிங்கப் பெண்ணாக முடிவெடுத்து வெளியேறுகிறார் பாக்யலட்சுமி. அதிரிபுதிரி எபிசோட்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…