பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களான பாவனி - அமீர் ஜோடி திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலம்பிரபலமான நடிகை பாவனி. தெலுங்கு சீரியல் நடிகையான இவர் நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நடித்த 'சின்னத்தம்பி' சீரியல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இவருடன் நடித்த பிரதீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து இருவருக்கிடையே நடந்த சண்டை காரணமாக பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள, மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5இல் போட்டியாளராக களமிறங்கினார். இவருடன் அமீர் என்பவர் போட்டியாளராக களமிறங்கினார். நாட்கள் செல்ல செல்ல அமீருக்கு பாவனி மீது காதல் எழுந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் இணைந்து நடனம் ஆடி வருகின்றனர்.
ஏற்கனவே பவானி மீது காதலில் இருந்த அமீர் ஒருவழியாக தான் நினைத்ததை நிறைவேற்றி விட்டார், சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று பவானி அமீரை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருந்தார். அதேபோல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசாக மோதிரம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே செல்லும் நிலையில், காதலை கூறிய விஜய் டிவி செட்டிலேயே திருமணத்தையும் தடபுடலாக நடத்தி விட்டது பாவனி - அமீர் ஜோடி. இந்த வாரம் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியில் இவர்களது திருமணம் குறித்த காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் செட்டில் காதலை வளர்த்து, பிக்பாஸ் ஜோடிகள் செட்டில் காதலை சொல்லி, அதே செட்டில் திருமணம் செய்துகொண்டுள்ளார் என கூறிவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…