விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீசன் 2. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வரும் இதில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்திருந்தார். அவர் இரண்டாவது முறையாக கருவுற்றிருந்ததால், அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். இவரை வெகு சீக்கிரமாகவே ரசிகர்கள் சந்தியாவாக ஏற்றுக்கொண்டனர். அவரும் சந்தியா கதாபாத்திரத்தில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், இவரும் திடீரென கடந்த வாரம் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சந்தியா கதாபாத்திரத்தில் தற்போது ஆஷா கவுடா நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ராஜா ராணி 2 சீரியலில் இருந்து அதன் இயக்குநர் பிரவீன் பென்னட் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பிரபல சீரியல்களை இயக்கிய பிரவீன் இந்த சீரியலில் இருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக ரமேஷ் பாரதி என்பவர் ராஜா ராணி 2 சீரியலை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
முதலில் ஆலியா மானசா விலகினார், அடுத்து வில்லியாக நடித்த விஜே அர்ச்சனா வெளியேறினார், கடந்த வாரத்தில் ரியா விஸ்வநாதன் விலகினார், இப்போது இயக்குநரும் விலகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…