தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதில் ஆண் - பெண் நட்பு பற்றி நல்ல விதமாக பேசப்பட்டிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி கிளைமேக்ஸ் நச்சென இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை கோலிவுட்டில் முன்னரே காட்டியிருக்கிறார்கள்.
விஜய், பூமிகா நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் கதையும் கிட்டத்தட்ட இப்படி ஒரு டைப்தான். இந்த படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தை ஏற்கனவே ஏற்று நடித்தவர்தான் பூமிகா. இவர் தமிழில் சூர்யா ஜோடியாகவும் நடித்துள்ளார்.
விஜய், சூர்யா தவிர, ஸ்ரீகாந்துடன் இணைந்தும் வேறு சில படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் பெரிய கதாநாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென படவாய்ப்புகள் குறைந்து காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில், ஜெயம்ரவியின் 30வது படத்தில் மீண்டும் தமிழுக்கு ரீ எண்ட்ரி தருகிறார் பூமிகா. எம் ராஜேஷ் இயக்கிவரும் புதிய படத்தில் ஜெயம்ரவியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பூமிகா. ஜெயம்ரவி மற்றும் பூமிகா இடையேயான பாசப்பிணைப்பினை சொல்லும் அதே வேளையில் மிகவும் காமெடியான ஒரு ஸ்கிரிப்ட் இது எனவும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…