நானே வருவேன் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு.
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் புதிய படம் நானே வருவேன். அண்ணன் தம்பி இருவரும் இணையும் படம் என்பதால் தானாகவே ஹைப் எகிறியுள்ளது. ஆனாலும் அந்த ஹைப்பை இன்னும் மேலே ஏற்றும்படியாக தாணு எதுவும் செய்யாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
கபாலி உள்ளிட்ட படங்களுக்கு அப்படி புரமோசன் செய்தவர், இந்த படத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என ரசிகர்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நானே வருவேன் படத்தில் தனுஷ் இரண்டு கெட்டப்பில் இருக்கும் இரு புகைப்படங்களை வெளியிட்டு, விரைவில் வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு.
செப்டம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வரவிருப்பதாகவும், அநேகமாக பொன்னியின் செல்வனுடன் மோதும் எனவும் கூறுகிறார்கள். தனுஷின் இரண்டு கெட்டப்புகளையும் ஷேர் செய்திருந்த தயாரிப்பாளர் அதில் ரிலீஸ் தேதியைக் குறிப்பிடவில்லை என்றாலும், தனுக்கு தெரிந்த வட்டாரத்தில் பொன்னியின் செல்வனுக்கே டஃப் கொடுக்கும் கதை என பேசி வருவதாகவும், அவ்வளவு பெரிய படத்துடன் மோதும் அளவுக்கு கண்டென்ட் இருந்தால் சரிதான் எனவும் கோலிவுட் வட்டாரச் செய்தி தெரிவிக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…