பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த பிரபலம் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். ஆனாலும் இதன்படி பிக்பாஸ் அந்த பிரபலத்தை வெளியேற்றுவாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. காரணம் கண்டென்ட் கொடுக்கும் நபரை அவர் வெறுக்கத்தக்க நபராகவே இருந்தாலும் அவரை வெளியேற்றாமல் காத்து வைப்பது பிக்பாஸ் சில சீசன்களில் செய்த விசயம்தான்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிறுகளில் கமல்ஹாசன் நேயர்கள் முன் தோன்றி அந்த வாரம் நடந்த விசயங்கள் பற்றி சுவாரஸ்யமாக விவாதித்து, தவறுகள் நிகழ்ந்திருந்தால் கண்டிப்பையும் தவறாமல் காட்டுகிறார். இந்நிலையில், இந்த வாரம் ரசிகர்கள் யாரைக் காப்பாற்றுவார்கள் என்கிற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
விக்ரமனைத் தான் ரசிகர்கள் காப்பாற்றுகின்றனர். அவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார். வாக்குகள் அடிப்படையில் கடைசி இடத்தைப் பிடித்தது செரினாதான். அதற்கு முந்தைய இடத்தில் இருப்பது ஆயிஷா. அதனால் இந்த முறை செரினாவை வெளியேற்றுவார்கள் என மக்கள் கருதுகின்றனர்.
ஆயிஷாவுக்கும் செரினாவுக்கும் பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை என்பதால், இந்த ஒரு நாளில் ஆயிஷா கடைசி இடத்துக்கு தள்ளப்படலாம் என்றாலும் அவர் கண்டென்ட் தருவார் என பிக்பாஸ் அவரை காப்பாற்றி விடுவார் என்கிறார்கள் மக்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…