Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிஆர்பி-ஐ உயர்த்த பிக் பாஸ் செஞ்ச வேலை! இது இறுதி வரை நிலைக்குமா..?

Editorial Desk Updated:
டிஆர்பி-ஐ உயர்த்த பிக் பாஸ் செஞ்ச வேலை! இது இறுதி வரை நிலைக்குமா..?Representative Image.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரா எபிசோடுகளை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். அதற்கு காரணம் இந்த வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பங்கள் வரும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று கொண்டிருப்பது தான்.

இந்த பிக்பாஸ் சீசனில் உள்ள போட்டியாளர்கள் சரியாக தங்களின் பங்களிப்பை அளிக்காததால் மிகுந்த போரிங் சீசன் என்று ரசிகர்கள் முடிவுகட்டி விட்டனர். எனினும் இந்த சீசன் முடிவதற்குள் எப்படியாவது ரசிகர்களைக் கவர வேண்டும் என்று நினைத்த பிக்பாஸ் பக்காவாக பிளான் செய்து வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பத்தை வரவைத்துள்ளனர்.

இதுவரை பிக்பாஸ் வீட்டில் உள்ள  போட்டியாளர்களின் சண்டையையும் அழுகையையும் மட்டும் பார்த்து வந்த ரசிகர்கள் முதல் முறையாக இந்த வாரம் அவர்களின் பாசம், மகிழ்ச்சி, அன்பு, புன்னகை என உண்மையாக வெளிப்படும்  அனைத்தையும் பார்த்து நெகிழ்ந்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் இன்று வெளியான ப்ரோமோவில் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதாவின் தயார் வீட்டிற்குள் வருகிறார்கள். அவர்கள் இருவரின் அன்பை வெளிப்படுத்தி ஆனந்தக் கண்ணீரில் மூழ்குவதைக் காண முடிகிறது.

பிக்பாஸ் ரசிகர்கள் ரச்சிதாவின் கணவர் வீட்டிற்குள் வருவார் என்று மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவர் வந்தாரா இல்லையா என்பதை இன்றைய எபிசோடை பார்த்துத் தான் அறிய முடியும்.

அடுத்ததாக போட்டியாளர் மணிகண்டாவின் குடும்பத்திலிருந்து மனைவி, அம்மா, மகன் என அனைவரும் வந்து அவரை மகிழ்ச்சியில் திழைக்க வைத்தனர். மேலும் அவரது சகோதரியும் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ்  பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ஆச்சரியத்தை அளிக்கிறார். இது குடும்பத்திற்காக நடந்த நிகழ்வா இல்லை டிஆர்பியை ஏத்த பிக்பாஸ் குழுவினரின் செய்த நடவடிக்கையா என்று தெரியவில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரரான மணிகண்டா உட்பட அனைத்து போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்குவதைப் பார்க்க முடிகிறது. அவர் இனிமேல் தான் நீங்கள் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நாசுக்காகக் கூறுகிறார். போட்டியின் சுவாரசியத்தை ஏற்றுங்கள் என்பதைத் தான் குறிப்பால் உணர்த்துகிறார் ஐஸ்வர்யா என்பது பார்க்கும் ரசிகர்களுக்குப் புரிகிறது போட்டியாளர்களுக்குப் புரிந்துள்ளதா? என்பதைப்  பொறுத்திருந்து காண்போம்.   

இந்நிலையில் அடுத்து எந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள்  வரப் போகிறார்கள் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள் என்பது உண்மை. இந்த வாரம் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளால் கவரப்படும் ரசிகர்களை அப்படியே இறுதிவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் தக்கவைத்து கொள்வார்களா என்று பார்ப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்