Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

கண்ணைக் கட்டி ஆடும் சுந்தரி... இழுத்து செல்லும் அம்மா!

UDHAYA KUMAR Updated:
கண்ணைக் கட்டி ஆடும் சுந்தரி... இழுத்து செல்லும் அம்மா!Representative Image.

முருகன் மாமாவிடம் உண்மையைச் சொல்ல முயன்ற சுந்தரியின் மாமனாரான கார்த்திக்கின் அப்பாவைத் தடுத்து நிறுத்தினார் சுந்தரி. ஆனால் அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காத மாமனார் தனது மகளின் கணவரான முருகனிடம் சொல்லப் போக, தடுத்து நிறுத்திகிறாள் முருகனின் மனைவி. 

அப்பா என்ன சொல்ல வரார்னா என ஆரம்பித்து, முருகனிடம் கார்த்திக்கை கண்டிக்க சொல்கிறாள். ஆனால் கார்த்திக் தான் கண்டிக்கும் எல்லையை தாண்டிவிட்டார். தான் என்ன சொன்னாலும் கேட்கப்போவதில்லை இருந்தாலும் நான் பேசி பார்க்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். 

சுந்தரியின் மாமனாரோ கோபத்தில் இருக்க, சுந்தரி அவரை சமாதானப்படுத்துகிறாள். அனு உங்களது வாரிசை சுமக்கிறாள். அவள் மீது கோபப்படாதீங்க. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும் என்று கூறுகிறாள். ஆனால் இதில் கடுப்பான மாமனார் என்னவோ எனக்கு இதெல்லாம் பிடிக்கல என்று கூறிவிட்டு கோபமாக கிளம்பிவிடுகிறார். 

இதன்பிறகு கார்த்திக்கின் அக்கா கார்த்திக்கு கால் செய்து நடந்தவற்றைக் கூறுகிறாள். ஆனால் இங்கு அதற்கு மேல் பிரச்சனை என கார்த்திக் கூற, அக்காவும் கோபமடைகிறாள். இதனை புரிந்துகொண்ட கார்த்திக் கிளம்பி வருவது என முடிவெடுக்கிறான். ஆனால் அப்போது அனுவுக்கு அவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட, கோபத்தில் கத்திவிட்டு வெளியே செல்கிறான். 

கார்த்திக் வீட்டுக்கு வருகிறான். அப்பாவும் வருகிறார். பொங்கல் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வச்ச மரியாதை இருக்காது என கோபத்தின் உச்சிக்கே சென்று எச்சரிக்கிறார். அவருக்கு உண்மை அனைத்தும் தெரிந்தாலும் வெளியில் தெரியாதது போலவே நடிக்கிறார்கள் அனைவரும். 

உண்மையில் கார்த்திக் அனுவை கல்யாணம் செய்தது முருகன் மாமா தவிர அனைவருக்கும் தெரியும். 

கண்ணைக் கட்டி ஆடும் சுந்தரி... இழுத்து செல்லும் அம்மா!Representative Image

சுந்தரி இன்றைய எபிசோட்!

சுந்தரியின் குடும்பத்தினர் பொங்கல் வருவதால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஏதாவது விளையாடாலாமா என கேட்டு விளையாட ஆரம்பிக்கிறார்கள். 

சுந்தரி கண்களைக் கட்டிக்கொண்டு, விளையாடுகிறாள். அவளுடன் கிருஷ்ணா, அவனது மனைவி, கார்த்திக், முருகன், அவரது மனைவி உள்ளிட்டோர் விளையாட திடீரென சத்தம் கேட்டு வருகிறாள் சுந்தரியின் அம்மா. 

அவர் சுந்தரி கண் கட்டியிருப்பதை பார்த்து டிரிகர் ஆகிவிடுகிறார். விளையாட்டா இருந்தா கூட சுந்தரிக்கு கண் தெரியாமல் இருப்பதை அனுமதிக்க மாட்டேன் என்கிறார். இதனால் சற்ற அதிர்ச்சி அடைகின்றனர் குடும்பத்தினர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்