Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முக்கியமான இருவரைத் தூக்கப்போகும் பிக்பாஸ்... அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்! வெறித்தனமான வீக்கெண்ட் எபிசோட்!

Editorial Desk Updated:
முக்கியமான இருவரைத் தூக்கப்போகும் பிக்பாஸ்... அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்! வெறித்தனமான வீக்கெண்ட் எபிசோட்!Representative Image.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி 60-நாட்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்னும் போலியாக நடித்துக் கொண்டும், தங்களுள் குரூப் அமைத்துக் கொண்டும் போட்டியின் ஆர்வத்தைக் கெடுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் காட்டம்.

பிக்பாஸ் சீசன்-6 இன்றைய முதல் ப்ரோமோவில் நாம் என்ன சொன்னாலும் தங்களுக்கு குரூப்-களை அமைத்துக் கொண்டு போட்டியின் முக்கிய தன்மையான தனித்து விளையாடும் தன்மையை இழந்த போட்டியாளர்கள் என்று கமல்ஹாசன் அவர்கள் மக்களுக்குக் கூறுகிறார். மேலும் 60-நாட்களைக் கடந்தும் நாம் பலமுறை கூறியும் பிக்பாஸ் போட்டியாளர்களின் நிலை மாறாததால் "டபுள் எலிமினேஷன்" மூலம் தான் மாற்றம் நிகழும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

பிக்பாஸ்  போட்டியின் தன்மையே போட்டியாளர்கள் அனைவரும் தனித்தனியாகப் போட்டியிட வேண்டும் என்பது தான். ஏனென்றால் இறுதியில் ஒருவர் தான் வெற்றியாளராக வர முடியும். ஆனால் இந்த சீசனில் பலமுறை எடுத்துக் கூறியும் போட்டியாளர்கள் தங்களைச் சரிசெய்து கொள்ளாததால், இப்போது "டபுள் எலிமினேஷன்"  வரை பிக்பாஸ் போட்டி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாக இன்று வெளிவந்த இரண்டாவது ப்ரோமோவில் இத்தனை நாட்கள் ஆகியும் தங்கள் உண்மையான முகத்தை காட்டாமல் இருக்கும் போட்டியாளர்கள் யார் என்று கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அதிகமாகச் சரவணன் மீனாட்சி தொடர் புகழ் "ரச்சித்தாவை" கூறுகின்றனர்.

அடுத்தபடியாக விக்ரமனை வீட்டில் உள்ள சிலர் கூறுகின்றனர். நம் அனைவருக்கும் தெரியும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்றுவரை யாரிடமும் சண்டை போடாமல் கோபமும் படாமல் இருக்கும் ஒரே போட்டியாளர் ரச்சித்தா தான். இது அவர்களது இயல்பா..? இல்லை  நடிப்பா..? என்று இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை என்பதால் ரச்சித்தாவை கூறியுள்ளார்.

அதே வேளையில் வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகளில் பங்குபெறும் விக்ரமனை ஏன்  கூறினார்கள் என்று தெரியவில்லை. இதனால் விக்ரமன் கோபம்கொண்டு தன்னை கூறிய தனலட்சுமியுடன் விவாதம் செய்வது ப்ரோமோவில் தெரிகிறது. எது நமக்கு எப்படித் தெரிந்தாலும் முழுவதுமாக என்ன தான் நடந்தது என்பதை   அறிய இன்றைய எபிசோடை பார்ப்போம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்