Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் சீசன் 6: மீண்டும் பள்ளிக்குப் போகலாம் டாஸ்க்..! கலகலப்பாகும் பிக்பாஸ் வீடு ..!

Editorial Desk Updated:
பிக்பாஸ் சீசன் 6: மீண்டும் பள்ளிக்குப் போகலாம் டாஸ்க்..! கலகலப்பாகும்  பிக்பாஸ் வீடு ..!  Representative Image.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னனி நிகழ்ச்சியாகக் கடந்த 5-ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கென தனி ரசிகர்கள்  கூட்டத்தை வைத்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்து அறிவித்துள்ளார். அது  நாம் அனைவரும் மிகவும் எதிர்பார்த்திருந்த கலாட்டா நிறைந்த டாஸ்க் தான். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் முழுவதும் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியராக மாறி பங்கேற்கும் பள்ளிக்கூட டாஸ்க் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சற்று நகைச்சுவை கலந்த வாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதல் ப்ரோமோவில் விக்ரமன், அசீம் மற்றும் அமுதவாணன் ஆசிரியர்களாகவும் மற்ற போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகளாகவும் மாறி டாஸ்கில் பங்கேற்பது தெரிய வருகிறது. கடந்த சில வாரங்களாக அனைத்து போட்டிகளிலும் சண்டை மிகுதியாக நடந்து வருவதால், இந்த பள்ளி குழந்தைகள் டாஸ்கில் ஒரு மாற்றமாக ரசிகர்களைக் கவரும் விதமாக நகைச்சுவையும் மகிழ்ச்சியும் பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையில் காணப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக வெளியான இரண்டு ப்ரோமோக்களில் இடம்பெற்ற காட்சிகளில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களின் குடும்பங்கள் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து வருகிறார்கள். இதில் மைனா, ஏ.டி.கே, விக்ரமன், ரச்சிதா ஆகியோர் கண்களில் கண்ணீர் பொங்கத் தங்களின் பெற்றோர்கள் பற்றிப் பகிர்வதைக் காண முடிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 10-போட்டியாளர்கள் மட்டும் மீதம் இருக்கும் நிலையில்

அவர்களின் குடும்பங்கள் அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் போட்டியாளர்களின் குடும்பங்கள் வரும் முன்னர் அவர்களைப் பற்றி போட்டியாளர்களின் மனதில் இருக்கும் எண்ணங்களை பிக்பாஸ் ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு  நடப்பதாகத் தெரிய வருகிறது. இதுவரை சண்டைகள் மட்டும் நடந்து வந்த பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சற்று மாறுதலாக மகிழ்ச்சியும், ஆனந்தமும், கண்ணீரும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்