விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பி வாழ்க்கையை அழகாக கூறும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதுமட்டுமல்லாமல், அந்த சீரியலில் அனைவருமே சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
அந்தவகையில், அவர்களில் ரசிகர்களின் மனதை அதிகம் கொள்ளையடித்த ஒரு கதாபாத்திரம் முல்லை. முதன் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். சித்ராவின் மறைவிற்கு பின்னர் அந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி ஒப்பந்தமானார்.
அவரும் நன்றாக நடித்துவந்தார். இந்த நிலையில் திடீரென அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த கடைசி நாள் கடந்த மாதம் 14-ந் தேதி என்றும் இந்த அழகான பயணத்திற்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். இருப்பினும் அவர் எதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார் என்கிற காரணத்தை வெளியிடவில்லை.
இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் இனி லாவண்யா நடிக்கவிருக்கிறார். இவர் வேறு யாருமல்ல விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் முன்னனி நடிகை நடித்தவர் தான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…