பிக்பாஸ் கதை சொல்லும் போட்டியில் ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. அதன்படி வரிசையாக ஒவ்வொருவரும் வந்து தங்கள் சொந்த கதை சோகக் கதைகளைச் சொல்கின்றனர். சிலருக்கு வேண்டுமென்றே பஸரை அழுத்தி அவர்களை கதையை தொடர விடாமல் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இன்றைய எபிசோடில் முதலாவதாக விஜே மகேஷ்வரி பேசுவது காட்டப்படுகிறது. அவர் பேச ஆரம்பித்ததுமே அஸீம் பஸரை அழுத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்கிறார். முன்னதாக அஸீம் பேசும்போது அவரை பேசவிடாமல் செய்ய விஜே மகேஸ்வரி உட்பட 3 பேர் பஸரை அழுத்தினர்.
மகேஷ்வரியைத் தொடர்ந்து விஜே கதிர் பேசுகிறார். அவரை பேசவிடாமல் செய்ய சாந்தி, விக்ரமன் உள்ளிட்டோர் பஸரை அழுத்துகின்றனர்.
இதே போல மைனா நந்தினிக்கும் விக்ரமன் அழுத்துகிறார். அவரைத் தொடர்ந்து ஷிவினும் பஸரைத் தட்டுகிறார். இதனைத் தொடர்ந்து 2 பேர் அழுத்தி விட்டீர்கள் இன்னொருவர்தானே அழுத்துங்கள் என மைனா நந்தினி கேட்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…