விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸில் மீதம் உள்ள 11-போட்டியாளர்கள் பத்தாவது வாரத்தில் பயணித்து வருகிறார்கள், இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய சில தினங்களே உள்ள நிலையில் போட்டியின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்கில் போட்டியாளர்கள் முழுவீச்சில் பங்கேற்று விளையாடி வந்தார்கள்.
இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட நரகத்து வாசிகள் மற்றும் சொர்கத்து வாசிகள் டாஸ்க் இறுதி கட்டத்தை நெருங்கியது தெரிய வருகிறது. இந்த டாஸ்க்கின் இறுதியில் தேவதைகளாகச் சொர்கத்து வாசிகள் அணியில் இருக்கும் நான்கு போட்டியாளர்களுக்கு அடுத்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இறுதியாக நரகத்து வாசிகள் அணியிலிருந்த ஏ.டி.கே வையும்,சொர்கத்து வாசிகள் அணியிலிருந்த தனலட்சுமியையும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மாற்றி விடுகிறார்கள், எனவே தேவதைகளாக இருந்த மணிகண்டா, அமுதவாணன், ஜனனி மற்றும் ஏ.டி.கே ஆகிய நால்வருக்கும் நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. இதனை வழக்கம்போல் ஏற்றுக் கொள்ளாத தனலட்சுமி கேமரா முன் அமர்ந்து புலம்பிக் கொண்டு இருக்கிறார்.
அடுத்தாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும் கொண்டு செல்லும் நபர்கள் யார் என்று கலந்து பேசி முடிவெடுக்கிறார்கள், இறுதியாக அனைவரும் சேர்ந்து அமுதவாணன் மற்றும் அசீம் இருவரையும் தேர்ந்தெடுப்பதாகத் தெரிகிறது. இந்த வாரம் முழுவதும் இது போன்ற டாஸ்க் வழங்கப்படுவதில் ஏதோ காரணம் இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்கள் இடையே கருத்துகள் நிலவுகிறது.
அதன்பின் வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விக்ரமன், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகிய மூவரும் ஏதோ விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதில் விக்ரமனுக்கு பதில் ஜனனிக்கு தேவதையாக விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டாக விக்ரமன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் அவர் கருத்திற்கு ஆதரவாக சில காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளதை நாம் காணமுடிகிறது. அதனால் இது குறித்து விக்ரமன் இந்த வார இறுதியில் தொகுப்பாளர் கமலிடம் உரையாடி ஒரு குறும்படம் போடுமாறு கேட்பார் என்று கண்டிப்பாகத் தெரிகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது வாரமே மிகுந்த காரசாரமாக செல்வதால் ,அடுத்து வரும் வாரங்களில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் போடும் சண்டைகளாலும், நடக்கும் கலவரத்தாலும்,கொடுக்கப்படும் டாஸ்க்களாலும் பிக்பாஸ் ரசிகர்களுக்குப் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…