வேலைக்காக பணம் கட்டி ஏமாந்துள்ளார் பிக்பாஸ் புகழ் ஜூலி. இதனை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். லண்டன் வேலைக்காக அநியாயமாக ஏமாந்த ஜூலியின் நிலையை அறிந்த ரசிகர்கள் பரிதாபப்படுகின்றனர். பிக்பாஸ் பிரபலத்துக்கே இதுதான் கதியா என கேட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் தமிழ். தமிழகம் மற்றும் தமிழ் சார்ந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 100 நாட்கள் ஒரே வீட்டில் வாழ்வதுதான் நிகழ்ச்சியின் சாரம்சம்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமானவர் ஜூலி. இவர் முதல் சீசனின்போது மக்களிடையே மிகப்பெரிய அளவில் கெட்டப்பெயர் வாங்கிவிட்டார். முன்னுக்கு பின் முரணாக பேசி, பலருக்கும் ஜால்ரா அடித்து அனைவரிடமும் நல்ல பெயர் வாங்க நினைத்து அவமானப்பட்டார்.
இந்நிலையில், அவரின் நல்ல குணங்களை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி, மக்களின் அன்பை சம்பாதித்துக் கொண்டார். இவர் தற்போது பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி பேசியுள்ளார்.
தான் லண்டன் வேலைக்காக தற்போது பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டு, 3 லட்சம் பணம் கட்டி ஏமாந்த கதையை வெளிப்படையாக கூறியிருந்தார். அப்போது தனது குடும்பம் தான் தனக்கு துணையாக ஆறுதலாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…