சென்னையில் டூப் அஜித்தை உண்மையான நடிகர் அஜித் என நினைத்து ரசிகர்கள் கூடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், தாய்லாந்து சென்ற நடிகர் அஜித், அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சில நாட்கள் பைக் ரைடிங்கிலும் ஈடுபட்டுவிட்டு, இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
இதற்கிடையே நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம் முன்பு அஜித்தின் துணிவு பட ஷூட்டிங் நடந்தது. அப்போது தீயணைப்பு வாகனம் மீது இருவர் முகமுடி அணிந்து அமர்ந்திருந்த நிலையில், அதில் ஒருவர் தலையில் நரைமுடி இருந்ததால் அது அஜித் தான் என நினைத்து ரசிகர்கள் அங்கு கூடினர்.
ஆனால் உண்மையில் அது அஜித் இல்லை. அவரைப்போல் தோற்றம் கொண்ட டூப்பை பயன்படுத்தி இயக்குனர் எச்.வினோத் காட்சிகளை எடுத்தது தெரியவந்தது. ஒரிஜினல் அஜித் என நினைத்து டூப் அஜித்திற்காக ஆவலோடு அங்கு காத்திருந்து, ரசிகர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் உண்மையை அறிந்த ரசிகர்கள், அதிகாலையிலேயே சென்னை விமான நிலையத்தின் முன் குவிந்தனர். சென்னை ஏர்போர்ட்டில் இருந்து நடிகர் அஜித் வெளியே வந்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…