பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் பாகம் 2-வில் வரும் சின்னஞ்சிறு நிலவே பாடலின் வரிகளை இதில் காண்போம்.
பாடல் வரிகள்: சின்னஞ்சிறு நிலவே
படம்: பொன்னியின் செல்வன் – 2
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள்: இளங்கோ கிருஷ்ணன்
பாடகர்: ஹரிசரண்
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ…
ஒரு கொள்ளைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ…
அத்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி…
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே…
யாங்குனை தேடுவனோ அன்னமே..
ஏதினி செய்குவனோ…
போங்கூழ் ஆனதடி அன்னமே..
தீங்கிருள் சூழ்ந்ததடி…
(இசை)
துள்ளும் நயனமெங்கே…
வெல்லம் போல்
சொல்லும் மொழிகள் எங்கே…
கன்னல் சிரிப்புமெங்கே…
என்னைச் சேர்
ஆரண மார்புமெங்கே…
மஞ்சின் இளங்குளிராய்
நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே…
கொஞ்சும் இளம் வெயிலாய்
என்னையே தேடிடும் பார்வையெங்கே…
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ…
ஒரு கொள்ளைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ…
(இசை)
கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி…
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி…
கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீந்தினியோ…
எற்றடி குற்றமுற்றேன் பிரிவை
சாபமாய் தந்தனையோ…
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ…
ஒரு கொள்ளைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ…
அத்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி…
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…