கல் மனதையும் கரைய வைக்கும் அயோத்தி மூவி தற்போது பெரும்பாலும் அனைவராலும் பேசப்பட்டு வரும் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் வரும் பாடலும் அனைவரின் மனதையும் கரைய வைக்கும். இதில், காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் படத்தின் பாடல் வரிகளை இதில் காண்போம்.
படம்: அயோத்தி
பாடகர்: பிரதீப் குமார்
இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன்
பாடலாசிரியர்: சாரதி
காற்றோடு பட்டம் போல
இந்த காற்றோடு பட்டம் போல
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா…?
எங்கோ போனது என்னிடம்
வந்து சேருமா…?
ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தெய்வம் போச்சு இன்று
நம் வாழ்கை எப்போதும்
கண்ணாம்பூச்சியா…?
இந்த மண் மேல இப்போது
நான் தான் சாட்சியா…?
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல
தன்னந்தனி படகுபோல
தத்தளிக்கும் வாழ்க்கை போல
தண்டனைகள் ஏதும் இல்ல
இந்த மண்ணுல
நீரிலே பூத்தாலும்
பூக்களின் வாசங்கள்
தண்ணியிடம் சேர்வதில்லையே
என்ன விதியோ?
அன்பிலே அன்பிலே
இந்த மனம் வாடுதே
கண்ணிலே ஈரம் சேருதே
கல்லிலே பூவும் பூக்குதே
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா…?
எங்கோ போனது என்னிடம்
வந்து சேருமா…?
ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தெய்வம் போச்சு இன்று
நம் வாழ்கை எப்போதும்
கண்ணாம்பூச்சியா…?
இந்த மண் மேல இப்போது
நான் தான் சாட்சியா…?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…