சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஆனாலும் படம் போதிய வசூலைப் பெறவில்லை என பேச்சு எழுந்துள்ளது. இன்னும் சிலர் படம் தோல்விப் படம் என கூறி வருகின்றனர். இதுகுறித்து கோப்ரா படத்தின் இயக்குநரிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளது.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் சீயான் விக்ரமை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. அதிலிருந்து கோப்ரா படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது.
விக்ரம் நடிப்பில் ஏற்கனவே வெளியான மகான் திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ஆனாலும் தியேட்டரில் ஒரு மாபெரும் வெற்றியை நோக்கி விக்ரமின் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், படத்தின் வெற்றி தோல்வி குறித்து பேச்சு எழுகையில், படத்தின் இயக்குநர் தனது இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார். அத்தனை குற்றங்களை செய்துள்ள கதாநாயகன், கிளைமேக்ஸில் தப்பித்து வெளிநாடு சென்று சொகுசாக வாழ்வது போல காட்ட முடியுமா. அது சரியா என்பது போல் கேட்டிருக்கிறார். இது மங்காத்தா கிளைமேக்ஸ் போல இருப்பதால், அஜித் ரசிகர்கள் காண்டாகியிருக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…