தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், சமீபத்தில் அவர் நடிப்பில் ஹாலிவுட் படமான "தி கிரே மேன்" படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. ரியான் காஸ்லிங், கிரிஷ் எவான்ஸ், ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில் தமிழ் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே இந்த மாதம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "திருச்சிற்றம்பலம்" வெளியாகவுள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் "வாத்தி" படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது, தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வாத்தி படத்தில் டீசர் மற்றும் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
"ஜகமே தந்திரம்" "அத்ராங்கிரே" "மாறன்" "தி கிரே மேன்" ஆகிய படங்கள் அனைத்தும் வரிசையாக ஓடிடியில் வெளியானது, இதில் கிரே மேன் நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பு என்பதால் அதை தவிர அணைத்து படங்களும் திரையரங்கில் வெளியாகியிருக்கலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த படங்கள் அணைத்து சுமாரான படங்கள் தான் எனவும் விமரிசனங்கள் எழுந்தன.
நடிகர் தனுஷ் நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் கலக்கி வந்தவர்தான் என்பது நாம் அறிந்ததே, அவரின் "வுண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்த முதல் படம் "எதிர் நீச்சல்" சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து அந்த படம் தயாரிக்கப்பட்டது, அதன் பின்னர் பல படங்களை தயாரித்த தனுஷ் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த "காலா" படத்தை அடுத்து படங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டார்.
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ்..?
இந்நிலையில் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஒரு படமும், இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும், பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் எலன் இயக்கத்தில் ஒரு படமும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…