சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனது கணவரும் நடிகருமான தனுஷின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதிலும் இருவரும் மனம் சேராமல் பிரிந்திருந்த நிலையில் வெளியிட்டிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் இருவரும் மீண்டும் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
21 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா இணை, சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வேறு வேறு பாதையில் பயணிக்கும் முடிவை எடுத்தனர். ரஜினி தரப்பிலிருந்து தூது விட்டுப் பார்த்தும் தனுஷ் தனது நிலையில் மாறாமல் இருக்கிறார். எனினும் மகன்களின் வாழ்க்கையில் இருவரும் பரஸ்பரம் முடிவு எடுப்பதாகவும், இருவர் வீட்டிலும் மகன்கள் வளர்வதாகவும் தெரிகிறது. இருவரையும் இணைக்கும் புள்ளியும் இதுதான்.
இந்நிலையில், தனுஷின் மூத்த மகன் பள்ளி விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். உடன் தனுஷும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…