கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் அட்லீ, திருமணம் முடித்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையாகிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் சமூக ஊடக தளங்களில் வெளியிட்டுள்ளார்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, பின்னர் ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ.
முதல் படத்திலேயே மிகப்பெரும் வரவேற்பை பெற்ற அட்லீ, அடுத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜயுடன் மூன்று ஹிட் படங்கள் கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
இதையடுத்து, பாலிவுட் பாதுஷாவான ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு, கனா காணும் காலங்கள் மூலம் பிரபலமான நடிகை பிரியாவை திருமணம் செய்தார்.
மேலும், தனது மனைவி பிரியாவுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட ஒரு பதிவில், "சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை நினைத்து நாங்கள் மகிழ்கிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…