பழைய கசப்புகளை மறந்துவிட்டு அனைவரும் இணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் ஒரு ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்தபின் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். அதன் பின்னர் தற்போது மீண்டும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை இயக்குனர் பாக்கியராஜ் நேரில் சந்தித்து சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக உரையாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாக்கியராஜ், அதிமுகவில் முறைப்படி இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைவரும் வேற்றுமைகளை புறம் தள்ளி ஒன்று சேர வேண்டும், முடிந்தால் நானே இதற்காக அனைவரையும் சந்தித்து பேசுவேன் என்றும் கூறிய அவர், அதிமுகவில் சிறிது காலத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…