உடல்நலக் குறைப்பாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து பின்னர் சென்னை எம்ஜிஎம் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அடுத்த ஓரிரு தினங்களில் அவர் வீடு திரும்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…