கோலிவுட்டின் பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து சரத்குமார் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருந்ததாகவும், பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக வெளியாகும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் சரத்குமார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…