Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துல்கர் வீட்டில் நடந்த மர்மம்... நள்ளிரவு நடந்தது என்ன? டிரைவர் மரணத்தில் வெளிவந்த உண்மை!

UDHAYA KUMAR Updated:
துல்கர் வீட்டில் நடந்த மர்மம்... நள்ளிரவு நடந்தது என்ன? டிரைவர் மரணத்தில் வெளிவந்த உண்மை!Representative Image.

இந்தியாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவரும் இந்தியா முழுக்க பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்று வருகிறார். இவரது டிரைவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ காதல் கண்மணி, சார்லி, சீதா ராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இந்தியா முழுக்க பிரபலமாகியிருக்கிறார்.  பின்னணி பாடகராகவும், தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார். இப்போது சென்னையில் தங்கியுள்ள துல்கர், தனது வீட்டில் ஆக்டிங் டிரைவராக பாஸ்கர் என்பரை பணியமர்த்தியிருக்கிறார். 

நேற்றைய தினம் அதிகாலையிலேயே துல்கர் விமான நிலையம் செல்லவேண்டும் என்பதால், டிரைவரை வீட்டிலேயே தங்க கூறியுள்ளார். துல்கரின் வீட்டிலேயே வேறொரு அறையில் தங்கியிருக்கிறார் டிரைவர்.  இதனால் அவர் சாப்பிட பீட்சா மற்றும் கோகோ கோலாவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருப்பதாக தெரிகிறது. 

இந்நிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் டிரைவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படுகிறது. இரவில் மது அருந்தினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  உடற்கூறு ஆய்வு முடிவுகளை வைத்தே உண்மை தெரியும் என்கிறார்கள்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்