தமிழ் சின்னத்திரையில் "கோலங்கள்" என்ற சீரியலை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் இயக்குநர் திருச்செல்வம். இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியலான "எதிர்நீச்சல்" சீரியலை இயக்கி வருகிறார். பெண்கள் அடிமைத்தனம், ஆண்களின் அதிகாரம் என்பதன் அடிப்படையில், எடுக்கப்பட்ட இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதுவும் கடந்த சில நாட்களில் இந்த சீரியலை பலரும் அதிகமாக எதிர்பார்க்க தொடங்கி இருக்கின்றனர். சீரியல் ப்ரோமோ வெளியான அடுத்த நொடியே பல்லாயிரக்கணக்கான லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சீரியலின் வெற்றிக்கு இயக்குனர் ஒரு பக்கம் காரணம் என்று சொன்னால் இதில் நடிகராகவும் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கும் குணசேகரன் கேரக்டர் [மாரிமுத்து] தான் மிக முக்கியம் என்பதே பலரின் கருத்தாக இருந்துவருகிறது.
அதுமட்டுமல்லாமல், மாரிமுத்துவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு சீரியலில் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல படங்களை இயக்கி நடித்தாலும், சீரியல்களில் அதைவிட அதிகமாக சம்பாதித்து வருகிறார். அதாவது, ஒரு எபிசோடுக்கு மட்டும் இவர் வாங்கும் சம்பளம் ரூ. 35 ஆயிரமாம். இதற்கு முக்கிய காரணமே 'குணசேகரன்' என்ற கேரக்டர் தான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…