விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தற்போது பாக்கியா மிகப்பெரிய கம்பெனியின் கேட்டரிங் ஆர்டரை கைப்பற்றியுள்ளார். இதனால், ராதிகா செம டென்சனில் இருக்கிறார். இனிமேல், தான் சீரியலில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கியா அடுத்தடுத்து தனது வாழ்க்கை பயணத்தில் வெற்றியை பெற்று வருகிறார். இப்படி ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கோபி ராதிகா, மகள் இனியாவிடமும் மாட்டிக்கொண்டு படாதபாடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக ஹீரோ ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ரஞ்சித். இவர் தான் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே செந்தூரப்பூவே என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். என்ன ரோல்? இனி சீரியலில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…