எதிர் நீச்சல் சீரியல் சன்டிவியில் மிகவும் பிரபலமானதாக மாறி வருகிறது. 9.30 பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் குணசேகரன் குடும்பத்தில் வாக்கப்பட்டு வரும் 4 பெண்களும் அவர்களின் கணவர்களுக்கும் மூத்தவரான குணசேகரனுக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மாமியார் கொடுமை கூட இரண்டாவதுதான், கலாச்சாரம், பண்பாடு என ஒரே குடைச்சல்.
நான்காவது தம்பியான சக்திக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவள்தான் கதாநாயகி ஜனனி. மூத்தவரான குணசேகரனின் பேச்சை மதிக்காமல் சில விசயங்களைச் செய்ததால், அவளையும் அவள் கணவரையும் கொஞ்ச நாளைக்கு பிரித்து வைக்கலாம் என நினைத்ததால், சக்தியை கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கிறார்.
சக்தியை பிரிந்து இருக்க முடியாது என நினைத்த ஜனனி, இதனை சக்தியிடம் தெரிவிக்க டிக்கெட் போட்டு உடனடியாக கிளம்பி வரச் சொல்கிறான் சக்தி. மருமகள்களிடம் மட்டுமே சொல்லிவிட்டு கிளம்புகிறாள் ஜனனி. இது பூதாகரமாக வெடிக்கிறது.
குணசேகரன் இருவரையும் வீட்டுக்குள் நுழைய விடமாட்டேன் என கண்டிப்பாக கூறிவிட, குணசேகரின் அம்மாவுக்கு அவரின் கோபம் குறைந்துவிடும் சக்தி கடைக்குட்டி நிச்சயமாக வரவேண்டும் என அவளது மகளிடம் கூறுகிறார்.
இந்நிலையில்தான் சக்தியும் ஜனனியும் குணசேகரன் புதுவீட்டில் குடியேறியதை தெரிந்து இன்று பால்காய்ச்சு திருவிழா என்பதால் உடனடியாக கிளம்பி வருகிறார்கள். இதற்காக ஜனனியின் அம்மாவும் இந்த வீட்டுக்கு வருகிறார். இதனால் மருமகள்கள் விழி பிதுங்குகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…