சின்னத்திரையில் பல முன்னணி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நிஷி சிங். ‘ஹிட்லர் தீதி’, ‘குபூல் ஹை’, ‘இஷ்க்பாஸ்’ மற்றும் ‘தெனாலிராமன்’ போன்ற பிரபலமான தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி தன்னுடைய 50 வது வயதில் காலமானார். நிஷி சிங்கின் கணவரும் நடிகருமான சஞ்சய் சிங் இறப்பு குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிஷி 2019 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதன்பின், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவருக்கு தொண்டையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் எதையும் சாப்பிட முடியாமல் போனாது. வெறும் திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 16 அன்று, நிஷி சிங் தனது 50 வது பிறந்த நாளைக் கொண்டாடினாள். ஆனால், அவளால் எதுவும் பேச முடியாது என்றாலும் மகிழ்ச்சியாக இருந்தாள். இருப்பினும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காலமானார். 32 வருடங்களாக என்னுடன் வாழ்ந்தவள் இப்போது என்னுடன் இல்லை என்று அவரது கணவர் தெரிவித்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர், உறவினர்கள், நண்பர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…