நடிகர் சிம்பு நடித்து வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஆன்மீகம் குறித்து சிம்பு கருத்து தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு, மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் நேற்று தியேட்டர்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் வரவேற்றாலும், படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இண்டெர்வியூ ஒன்றில் நடிகர் சிம்புவிடம் ஆன்மீகம் குறித்து கேட்கப்பட்டதற்கு, "எல்லோரும் கொரோனா காலத்தில் ஊரடங்கில் இருந்தபோது, நான் வெளியே சென்று உடலைக் குறைக்கும் வேலைகளில் ஈடுபட்டேன்.
மேலும் ஆன்மீகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்ததும், லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ் போன்ற புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். ஒருவர் உயிரிழந்தால் நாம் அனைவரும் துன்பமடைவோம். ஆனால் அது இயற்கைக்கு தேவையான ஒன்று.
நல்லதோ, கெட்டதோ இந்த உலகில் எது நடந்தாலும், அதற்கு பின்னே ஒரு காரணம் இருக்கும் என்பதைத் தான் இப்போது நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்." என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…