வாரிசு படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் இது உறுதியான தகவல்தான். ஆனால் இந்த படம் லோகேஷின் தனிப்படமா இல்லை கைதி - விக்ரம் யூனிவர்ஸில் வருகிறதா என்று பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். மேலும் சிலர் இது லோகேஷ் யூனிவர்ஸின் வேறொரு உலகம் என கூறி வருகின்றனர். அதாவது இன்னொரு யூனிவர்ஸை தொடங்க இருக்கிறார் லோகேஷ் என தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த படம் விக்ரம் யூனிவர்ஸில் இருந்தால், நிச்சயம் பஹத் பாசில் கதாபாத்திரத்துடன் சேர்ந்து பயணிக்க வாய்ப்பிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பஹத் பாசிடமே கேட்டு தெரிந்துகொள்ள செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர்.
ஓரளவுக்கு சமாளிக்கும் தொணியில் பதில் சொன்ன பஹத் பாசில் இதுகுறித்து லோகேஷ் கன்பாஃர்ம் செய்யவேண்டும் என்பதை உறுதியாக கூறினார். மேலும் இது பார்ட் ஆஃப் எல்சியூ என்றே அவரும் தெரிவிக்கிறார். தானும் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்றே பட்டும் படாமலும் தெரிவித்திருக்கிறார் பஹத்.
லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை சென்னையில் கடந்த ஜனவரி 4ம் தேதி துவக்கினார். பின்னர் கேரளா, மும்பை லோனாவாலாவில் நடைபெறவிருந்த ஷூட்டிங் பின் காஷ்மீருக்கே திட்டமிடப்பட்டது. இப்போது படக்குழு காஷ்மீர் சென்றிருப்பதாக ஒரு தகவல்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…