பிரபல சீரியல் நடிகரான பப்லு ப்ருவித்ராஜ் தனது 56 வயதில், 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 1979 ஆம் ஆண்டில், சிவாஜி கணேஷன் நடிப்பில் வெளிவந்த நான் வாழ வைப்பேன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகவானவர் பப்லு. இதனைத் தொடர்ந்து, ஹீரோவாக மலையாள படங்களில் நடித்து, இன்னும் பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இவ்வாறு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த இவர், சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதன் படி, ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம், ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி, அரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சன்டிவியில் மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றான கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல், பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 27 வயதில் அஹெத் என்ற மகனும் உள்ளார். அஹெத், ஆட்டிசம் குறைபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் பப்லு 23 வயது இளம்பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் பப்லுவிற்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இந்நிலையில் நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த செய்தி, தமிழ் சினிமா மற்றும் சீரியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…