பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி ஆறு வாரங்களாக நடந்து வருகிறது, எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்கள் அனைவரும் போட்டியை புரிந்து கொண்டு முதல் வாரத்தில் இருந்தே சண்டையின் மூலம் முழுமூச்சில் விளையாடி வருகிறார்கள்
பிக்பாஸ் வீட்டில் சண்டை என்றால் ஒரு ஒரு சீசனிலும் பேர்போன ஒருவர் இருப்பார்கள், ஆனால் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் பல பெயர்களை சொல்லலாம். பிக்பாஸ் விளையாட்டு என்றால் வெறும் சண்டை மட்டுமில்லை உங்களை நீங்கள் வேறுவிதமாகவும் மாற்றிக் காட்டலாம் என்று கமல் சார் ஒவ்வொரு வார இறுதியிலும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு கூறினாலும் நாங்கள் சண்டை மட்டும் தான் போடுவோம் என்ற படி நடந்து கொள்கிறார்கள்.
புதுமையாக தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன் சிக்ஸில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொரு வரும் தங்களுக்கென தனி யுக்திகளை வைத்துள்ளனர், அதில் ஒரு சிலர் சண்டை மட்டுமே போட்டு வாரத்தை கடத்துவது வார இறுதியில் அமைதியடைவது. இன்னும் சிலர் இந்த வீட்டில் என்ன நடந்தாலும் அமைதியைக் கடைபிடிப்பவர்கள். இன்னும் சிலர் மற்றவர்களை குறைசொல்லி விளையாடுபவர்கள். இதன் மூலம் எப்போது அனைவரும் தங்கள் உண்மையான விளையாட்டை ஆடுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு வேலை நாமினேஷன் லிஸ்டில் வந்தால் போட்டியாளர்களின் உண்மையான விளையாட்டு வெளிப்படுமோ என்று அனைவரும் காத்திருந்தனர் .
நாமினேஷன் என்றால் எங்களுக்கு சாதாரணம் என்பதை போல வார வாரம் நாமினேஷனில் வரும் போட்டியாளர்கள் அசீம் மற்றும் தனலட்சுமி வழக்கம் போல் இந்த வாரமும் உள்ளார்கள் கூடுதலாக பிக்பாஸ் வீட்டின் அமைதி சிங்கங்களான ராபர்ட் மாஸ்டர், ராம், கதிரவன் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர். மேலும் புதியதாக போட்டியாளர் அமுதவாணனும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்.
இந்த நாமினேஷன் லிஸ்டை பார்க்கும் போது வழக்கம்போல் தனலட்சுமியும் அசிமும் போட்டியின் சுவாரஸ்யத்திற்காக மக்கள் வெளிய அனுப்பப்பட்டார்கள் என்று எதிர்பாக்கலாம். மக்களே வெளியே அனுப்பினாலும் பிக்பாஸ் அனுப்பமாட்டார் என்று கூட சொல்லலாம். என்ன சண்டை போட்டாலும் இந்த சீசன் 6-ன் அதிரடி ஆட்டக்காரர்கள் இவர்கள் தான், பிறகு நகைச்சுவையாக இருந்த அமுதவாணன் அதிரடி ஹீரோவாக மாறியுள்ளார். அவரும் வெளியே செல்ல வாய்ப்பில்லை கடைசியாக பிக்பாஸ் வீட்டின் அமைதி தூண்களான ராபர்ட் மாஸ்டர், ராம் மற்றும் கதிரவன் இவர்கள் மூவரில் ராபர்ட் மாஸ்டருக்கு தான் வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம் ஏனென்றால் அவர் வீட்டில் பாதி நேரம் பிடித்துவைத்த பிள்ளையாரை போல ஒரே இLத்தில் தான் இருப்பார் அதுவும், சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா அருகில் தான் இருப்பார். அதைத்தவிர அவர் சுவாரசியமாக எதுவும் செய்யாததால் அவருக்கு வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நாமினேஷனில் இருக்கும் நபர்கள் தங்களை காத்துக்கொள்ள இந்த வாரம் முழுவதும் நன்றாக விளையாடினாலே போதும். மக்கள் அவர்களை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது. மக்களின் வாக்கின் மூலம் வெளியேறும் நபரை இந்த வார இறுதியில் அறிந்துகொள்ளுவோம். ஏனென்றால் பிக்பாஸ் தாரக மந்திரமே "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்பது தான் எனவே காத்திருப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…