தென்னிந்திய சினிமா உலகம் இணைந்து நடத்தும் பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நேற்று சூர்யாவின் இரண்டு படங்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்தியா சினிமாவிலும் சிறந்த கலைஞர்கள் மற்றும் படைப்புகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா ஆண்டு தோறும் நடந்துவருகிறது.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருதுகள் நேற்று பெங்களூரில் நடந்த நிலையில், இதில் சிறந்த படமாக சூர்யா நடித்த, உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் சூர்யா நடித்த சூரரைப் போற்று 8 விருதுகளை அள்ளிச்சென்றது.
தமிழின் சிறந்த படமாக சூர்யா நடித்த ஜெய்பீம் படம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சூரரை போற்று படத்திற்காக நடிகர் சூர்யா சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜெய்பீம் படத்தின் நாயகி விஜிமோல் ஜோஸ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா சிறந்த இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதே படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த படத்தில் இடம்பெற்ற காட்டுப்பயலே பாடலைப் பாடிய தீ சிறந்த பாடகியாகத் தோந்தெடுக்கப்பட்டார்.
மேலும் அதில் ஹீரோயினாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது வழங்கப்பட்டது. சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த பசுபதி மற்றும் ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…