பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் ஆளாக பிரபல டிக்டாக்கர் வெளியேறுவார் என யூகிக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது நாளிலேயே சண்டை, புகைச்சல் என மாறியிருக்கிறது.
மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் ஜிபி முத்து, அசல் கோலார், ஆயிஷா, அஷீம், மகேஷ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்டோர் நல்ல விதமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், முதல் வாரமே முடியவில்லை என்றாலும் அதற்குள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என பேசத்துவங்கிவிட்டனர்.
முதல் ஆளாக வெளியேறுவது தனலட்சுமி தான் என ஜி பி முத்து ஆர்மி அறிவித்துள்ளது. ஜி பி முத்துவையே வெற்றியாளராக அறிவிக்கவேண்டும் என நினைக்கும் அவர்கள், தங்களது தலைவனை எதிர்க்கும் யாரையும் போட்டியில் வெற்றி பெற விடக்கூடாது என முடிவு செய்துள்ளனர். தனலட்சுமி நேற்று ஜிபி முத்துவை பார்த்தாலே பிடிக்கவில்லை என்பது போல கூறியிருந்தார். அதுவும் நேரடியாக கேமராவிலேயே கூறி அவரது ரசிகர்களின் எதிர்ப்பை வாங்கிக்கொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…