தன்னுடைய மகன் இப்படி ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு சுந்தரிக்கு துரோகம் செய்றான்னு தெரிஞ்சிகிட்ட அவனுடைய அம்மா அதிர்ச்சியில உரஞ்சி போய் நிக்கிறாங்க. இது பத்தி சுந்தரி கிட்ட தனியா பேசணும்னு கோவிலுக்கு கூட்டிட்டு போய் அழுதுகிட்டே என்ன நடந்ததுன்னு கேக்குறாங்க. சுந்தரியும் எல்லாத்தையும் சொல்ல அவங்களுக்கு வந்துச்சு கோவம். என்ன பேச்சு பேசிட்டு இருக்க, உன்னைய எங்கள நம்பி கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க. இந்த விஷயம் மட்டும் வெளிய போச்சுன்னா என்ன நடக்கும்னு தெரியுமா? நான் இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்னு சொல்றாங்க.
தன்னுடைய நண்பன் கிருஷ்ணாவிடம் நடந்ததை சொல்றான் கார்த்தி. அவனும் பதட்டத்துல அவனுடைய அம்மா கிட்ட பேசுறான். ஆனா அவங்க கேக்குறதா இல்ல, இப்பவே நாம அனு வீட்டுக்கு போயி எல்லாத்தையும் சொல்லணும்னு கூட்டிட்டு போறாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம கிருஷ்ணா உடனே கார்த்தி அக்கா கிட்ட நடந்தத சொல்றான். அவங்களும் பயத்துல எப்படியாவது தடுத்து நிறுத்துங்கன்னு சொல்றாங்க.
அங்க என்னடான்னா அனு கார்த்திக்கிட்ட சுந்தரிய பத்தி கோவத்துல என்னென்னமோ பேசுறாங்க. அதையெல்லாம் கேட்டுட்டு அவன் சந்தோசப்பட்டு சிரிச்சிட்டு இருக்கான். இவங்க இங்க கோவில்ல இருந்து கெளம்புறாங்க. எப்படியோ அனு வீட்டுக்கு போகாம இருக்க, கிருஷ்ணாவும் சுந்தரியும் கார் பிரேக் டவுன், அது இதுன்னு என்னென்னமோ சமாளிக்கிறாங்க ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகல. கடைசில எப்படியோ அனு வீட்டுக்கு மூனு பேரும் போய்ட்டாங்க.
கார்த்தி அம்மா போயி டேய் டேய்னு கார்த்திக்கை கூப்பிட, அனு அம்மா கீழ இறங்கி வராங்க. இவங்களும் சேர்ந்து தான் இந்த காரியத்தை பண்ணிட்டாங்களோன்னு கார்த்தி அம்மா கண்ட படி பேசுறாங்க. ஆனா பாருங்க இப்பவும் அனுக்கு இந்த விஷயம் தெரியவே போறதில்ல. அவளுக்கு நல்ல படியா குழந்தை பொறக்குற வரைக்கும் இந்த உண்மை மட்டும் தெரியவே போறதில்ல. ஆனா இன்னைக்கு இதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…