இறுதிச் சுற்று, சூரரைப் போற்று போன்ற அற்புதமான படைப்புகளைத் தந்த சுதா கொங்கரா அடுத்து கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனத்துடன் இணைகிறாராம். இந்நிலையில், ஹோம்பலே நிறுவனம் அடுத்து சினிமாவில் முதலீடு செய்யும் தொகை 3 ஆயிரம் கோடி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களை தயாரித்திருந்தது ஹோம்பலே நிறுவனம். இதனைத் தொடர்ந்து காந்தாரா படத்தையும் தயாரித்திருந்தது. இதன்மூலம் 2500 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வந்துள்ளது இந்நிறுவனத்துக்கு. இதன்மூலம் இந்திய அளவில் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக மாறிய இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இயக்கி இத்தனை ஆயிரம் கோடியை இன்னும் பல ஆயிரம் கோடிகளாக மாற்ற முயற்சித்துள்ளது.
தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபாஸ் ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரசாந்த் நீலும் சினிமாட்டிக் யூனிவர்ஸை ஆரம்பிக்கிறார். கேஜிஎஃப் படத்தின் தொடர்ச்சி இதில் இருக்கும் என்கிறார்கள். இது தவிர கேஜிஎஃப் படத்தின் மூன்றாவது பாகமும் தனியாக தயாராகவுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…