தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தான். பெண்ணை மனிதராக பார்க்காமல் அடிமைப் போல நடத்தும் சமூகத்திற்கு புத்தி கூறும் வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஆதிரையின் திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து தினமும் குணசேகரன் குடும்பத்தில் பிரச்சனைகள் தான். இருப்பினும் தன்னுடைய தம்பி என்று பார்க்காமல் ஞானத்தை குணசேகரன் கேட்கக் கூடாத கேள்விகளால் காயப்படுத்துகிறான். இதனால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கின்றனர். மிகுந்த வழியில் இருக்கும் ஞானம் அழுதுக்கொண்டே தன்னுடைய அறைக்கு செல்கிறான். சக்தி வீட்டிற்குள் வரும் போது அனைவரும் அழுதுகொண்டிருப்பதை பார்த்து என்ன நடந்தது என்று விசாரிக்கின்றான்.
பின்பு அண்ணன் இருக்கும் அறைக்கு சென்றால் கதவை தாப்பாள் போட்டு விட்டு ஞானம் கதவை திறக்காததால் அனைவரும் பயந்து விட்டனர். பின்னர் கதவை திறந்த ஞானம் மனம் விட்டு பேசி அழுகிறான். என்னால தற்கொலை செய்யறதுக்கு கூட தைரியம் வரலையேன்னு கதறி அழுகிறான். தன்னுடைய தந்தை அழுவதைப் பார்த்து அவரின் மகள் ஆறுதலாக பேசுகிறாள். இது ஞானத்திற்கு இன்னும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. அடுத்த நாள் குணசேகரன் கெளம்பி வந்து சாப்பிட அமர்கிறான். ஞானம் வந்து உட்காரும் போது எழுந்து விடுகிகிறான் குணசேகரன். எனக்கு தகுதி இல்லாதவங்களோட என்னால உக்காந்து சாப்பிட முடியாது என்று அவமானப்படுத்துகிறான்.
தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக சக்தி பேசி அங்கிருந்து அவரை கூட்டிக் கொண்டு செல்கிறான். வீட்டில் இருக்கும் அனைவரும் வருத்தத்தில் சென்று விடுகின்றனர். குணசேகரன் அதே திமிருடன் எங்க போனாலும் என்கிட்ட தான் வந்தாகணும்னு நக்கலா பேசுகிறான். கடையில் சக்தி மற்றும் ஞானம் மாறி மாறி ஊட்டி விட்டு சாப்பிடுகிறார்கள். அடுத்து ஞானம் என்ன முடிவு செய்யப்போகிறான் என்று பொறுத்திருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…