பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாவதாக இருந்த இரும்பு கை மாயாவி திரைப்படம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், அதுகுறித்து லோகேஷ் கனகராஜ், சூர்யா இருவரும் அடிக்கடி பேசி வருவதாகவும் பேட்டி ஒன்றில் லோகேஷே கூறியிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்துக்கு பிறகு தளபதி 67 படத்தை எழுதி வருகிறார் லோகேஷ். இது அனைவரும் அறிந்த செய்திதான். இதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகும் எனவும் லோகேஷே பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், பேட்டியில் அவர் இரும்புக் கை மாயாவி குறித்தும் பேசியிருக்கிறார். அதில் தானும் சூர்யாவும் இது குறித்து பேசி வருவதாகவும், இருவரும் ஃப்ரீ ஆனதும் இந்த படத்தை துவங்கலாம் என முடிவு செய்துள்ளனராம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…