போலோ ஷங்கர், சலார், என்பிகே 107 உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ள நடிகை ஷ்ருதிஹாசன் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்த ஷ்ருதி, திடீரென படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். கடைசியாக வெளியான லாபம் படமும் சரியாக போகவில்லை என்பதால் தமிழில் மார்க்கெட்டை தக்கவைக்கமுடியாத நிலை அவருக்கு. இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது குறித்த காரணத்தை பேசியுள்ளார் அவர்.
சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்து இருப்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் அவர். இது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான் என்றாலும் சினிமா நடிகைகளையே அவர்கள் வியாபாரத்துக்காகத்தான் பயன்படுத்துகிறார்கள் என கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
கதாநாயகர்களை மையப்படுத்தியேதான் இப்போதும் கதைகள், சினிமாக்கள் உருவாகின்றன. ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தைப் போலவே சினிமாவிலும் ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெண்கள் வியாபாரத்துக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறார்கள். எனினும் இப்போது கொஞ்சம் நிலைமை மாறி வருகிறது. கதாநாயகிகளுக்கும் நிறைய நல்ல கதைகள் வருகின்றன என கூறியுள்ளார் அவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…