தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஜெயம் ரவி. இவரது அத்தனை படங்களிலும் வித்தியாசமான விசயம் ஒன்றாவது இருக்கும். இவர் நடிப்பில் வெளியான படங்களில் பல படங்கள் வெற்றிப்படங்கள்தான். அடுத்தடுத்து நல்ல கதைகளில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி.
அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நரேன் நடிக்கும் புதிய படமான இறைவன் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என தகவல் வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் கம்பேக் கொடுக்கும் படமாக இது இருக்கும் என அவரது ரசிகர்கள் இந்த படத்தை விட படத்தின் ஆல்பத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. இது கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு வெளியாக பூமி படுதோல்வியடைந்தது.
தற்போது பொன்னியின் செல்வன், அகிலன் படங்களில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. இறைவன், ஜெயம்ரவி 30 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்து நடித்து வரும் ஜெயம் ரவிக்கு அடுத்த ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும் என யூகிக்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…