ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜிகர்தண்டா படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுகுறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ளார் கார்த்திக்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய படம் ஜிகர்தண்டா. இந்த படம் வெளியான சமயத்தில் அனைவரது நடிப்பும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. பல விருதுகளையும் அள்ளிக் குவித்த இந்த படத்தின் இரண்டாவது பாகம் வராதா என பலரும் கேட்டிருந்த நிலையில், இன்று அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…