லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் உருவாகவுள்ள கைதி படத்தின் இரண்டாம் பாகம், அதன் முதல் பாகத்தை விட பத்து மடங்கு அதிக பட்ஜெட்டில், அதை விட மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, கைதி 2 பற்றி பேசியிருந்தார். விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ளாராம். அந்த படம் முடிந்த பிறகு கைதி 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும் அது கைதியின் முதல் பாகத்தைக் காட்டிலும் பத்து மடங்கு பெரிய படமாக அமையும் எனவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விக்ரம் படத்தின் வெற்றியை கடந்த ஒரு வாரமாக அறுவடை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தது படக்குழு. ஒரு பக்கம் தயாரிப்பாளராக கமல்ஹாசன் படத்தில் வேலை செய்த உதவி இயக்குநர்களுக்கு பைக், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார் என அன்பு பரிசை வாங்கி கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
லோகேஷ் கனகராஜை பலரும் பாராட்டி வரும் வேளையில் சில யூடியூப் சேனல்களில் அவரை அழைத்து பாராட்டு விழா மற்றும் பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படிபட்ட வேளையில்தான் கைதி 2 படம் பற்றி தெரியவந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…