விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களில், கண்ணே கலைமானே தொடர் சற்று வித்தியாசமானதாகும். இந்தத் தொடரில், பவித்ரா கவுடா, நந்த கோபா, ராஷ்மி பிரபாகர், சிறுமி சம்யுக்தா போன்றோர் நடித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் திரைக்கு வந்த இந்த தொடர் தற்போது வரை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவில் கண்ணே கலைமானே சீரியல் நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியல், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் விவரங்கள், ப்ரோமோ உள்ளிட்டவற்றைக் காணலாம்.
கண்ணே கலைமானே சீரியல் விவரங்கள்
கண்ணே கலைமானே சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சீரியல் பெயர் |
கண்ணே கலைமானே |
வகை |
நாடகம் |
சேனல் |
விஜய் டிவி |
வெளியீடு |
10 அக்டோபர் 2022 - |
இயங்கும் நேரம் |
22-24 நிமிடங்கள் |
நாள் |
திங்கள் முதல் வெள்ளி வரை |
நேரம் |
01:30 PM- 02:00 PM |
எழுதியவர் |
வசனங்கள் சிவராம் குமார் |
திரைக்கதை |
தீபிகா ரமணி |
கதை |
தீபிகா ரமணி |
இயக்கம் |
ராஜா தனுஷ் |
தீம் மியூசிக் இசையமைப்பாளர் |
இளையவன் |
தயாரிப்பாளர் |
பா. அருண்குமார் |
நெட்வொர்க் |
ஸ்டார் விஜய் |
கண்ணே கலைமானே சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்
இதில், கண்ணே கலைமானே சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.
உண்மையான பெயர் |
கதாபாத்திர பெயர் |
பவித்ரா கவுடா |
பானுமதி |
சம்யுக்தா |
தமிழ் |
நந்த கோபால் |
ராம் |
ராஷ்மி பிரபாகர் |
மாதுரி |
சகாஷ்ரா |
- |
டேவிட் ராஜா |
- |
விஜய் டிவி சீரியல் கண்ணே கலைமானே கதை
ராம் மற்றும் பானு இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் முடிந்து தனியே வாழ்ந்து வந்தனர். வேலை தேடி ராம் வெளியூர் சென்ற சமயத்தில், மாதுரி என்ற வசதியான பெண் ராம் மீது காதல் வளர்த்து, அவரையே மணந்து கொள்ள எண்ணுகிறார். இதில், ராமின் முதல் திருமணத்தைக் கேட்டு அதிர்ந்த மாதுரியின் பெற்றோர், பானுவைக் கொல்லத் திட்டமிட்டனர். எதிர்பாராத விதமாக, பானுவிற்கு நேர்ந்த விபத்தில் அவளது கண் பறிபோனது. ராமுவிற்கும் தலையில் அடிபட்டி பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்து போயின. பிறகு, ராம் மற்றும் மாதுரி திருமணம் முடிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
அதே நேரத்தில், பார்வையை இழந்த பானுமதி, தனது 8 வயது மகள் தமிழுடன் சகோதரன் குடும்பத்தில் வசிட்து வருகிறார். இருப்பினும், அவளுடைய அண்ணி, பானுமதி மற்ரும் குழந்தை தமிழைத் தவறாக நடத்துகிறாள். இதனால், பார்வையற்ற பானு தனது மகளைக் கூட்டி ராம் வசிக்கும் ஊருக்குச் சென்றனர். எதிர்பாராத விதமாக, அவர்கள் இருவரும் ராமைச் சந்தித்து, மாதுரி வீட்டிலேயே தங்கி விடுகின்றனர். இதனைத் தொடர்ந்து, இவர்களைத் தேடி அவர்களது அண்ணியும், அந்த வீட்டிலேயே தங்கி விடுகிறார். இதற்கு நடுவில், ராமிற்கு மீண்டும் பழைய ஞாபகங்களும் வந்து விட்டது. மாதுரிக்கு ராம் மீது அதீத காதல் உள்ளது.
இவ்வாறு நாள்கள் ஓட, ஒரு முறை பானுமதி வீட்டின் நீச்சல் குளத்தின் அருகே வேலை செய்த போது, குளத்தில் விழுந்து விட்டாள். இதில் ராம் தனது காதல் மனைவி பானுவிற்கு உதவி செய்ததைப் பார்த்து மாதுரி கோபமடைந்து, பானுமதி வீட்டை விட்டு வெளியேறி பானுமதி, அவளது அண்ணி, மற்றும் தமிழ் மூவரும் தனி வீட்டில் தங்குகின்றனர். ராம், மீண்டும் பானுவின் வீட்டிற்குச் சென்று அவளது அண்ணியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்கிறார். பிறகு, பானுவை நான் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி, அவர்களுக்கு உதவ முன் வருகிறான்.
இதில், சினிமா ஹீரோவாக இருக்கும் ராம், தனது இன்ஃபுளுயன்ஸைப் பயன்படுத்தி பானுவைத் தன் படத்தில் பாட வைக்கிறான். அதே நேரத்தில், பானுவிற்கு கண் கொண்டு வர மிகுந்த முயற்சி எடுக்கிறார். இந்த கதையில், பானு தன்னுடைய பாட்டுத் திறனால் முன்னிலைக்கு வருவாரா, மாதுரிக்கு ராமின் முதல் கல்யாணம் குறித்து தெரிய வந்தால் என்ன நடக்கும் உள்ளிட்ட பல கேள்விகளுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கண்ணே கலைமானே சீரியல் இன்றைய எபிசோட்
விஜய் டிவி கண்ணே கலைமானே சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.
கண்ணே கலைமானே சீரியல் இன்றைய எபிசோட்
கண்ணே கலைமானே சீரியல் ப்ரோமோ
திரைக்கு முன்னதாக, விஜய் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் கண்ணே கலைமானே சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…