காந்தாரா படத்தைப் பார்த்துவிட்டு இந்திய சினிமாவின் இரண்டு தூண்களான கமல் சாரும், ரஜினி சாரும் என்னை அழைத்தார்கள்.
ரஜினி சார் என்னை அவர் வீட்டுக்கே அழைத்து பேசினார். நாங்கள் இருவரும் 1 மணி நேரத்துக்கும் அதிகமாக பல விசயங்களைப் பேசினோம். படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார் ரஜினி சார்.
இன்னொரு பக்கம் கலையுலகின் பிதாமகன், நடிப்பின் கடவுள் என அனைவராலும் அழைக்கப்படும் கமல் சார். எனக்கு அவர் அழைப்பு செய்தது அறிந்ததும், அவரிடம் பேச நினைக்கையில் கையெல்லாம் நடுங்கி, அதிர்ந்து விட்டது. அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் இதை உணர்ந்தேன். அவர் படத்தை தனக்கு இன்ஸ்பிரேசன் எனக் கூறினார். கிரிஷ் கர்ணாட் அவர்களின் காடு திரைப்படமும் காந்தாரா போல காட்டைப் பற்றிய படம் என்பதால் இரண்டையும் ஒப்பிட்டு பேசினார். மேலும் அந்த காலத்தில் இருந்தது போல நாம் தரமான படங்களைக் கொடுக்கத் துவங்கிவிட்டோம் என்றும் கூறினார். காடு படம்தான் எனக்கு தேவர்மகன் படம் எடுக்க இன்ஸ்பிரேசனாக இருந்தது என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…