பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று கியாரா அத்வானி வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், இதற்கு மேலும் ரகசியமாக வைக்க முடியாது, டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் சித்தார்த் மல்ஹோத்ராவுடனான திருமணம் குறித்து ஏதாவது சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கபீர் சிங் (2019) படத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்த கியாரா அத்வானி, சித்தார்த் மல்தோராவுடன் சில காலமாக டேட்டிங் செய்து வருகிறார். நவம்பர் 27 அன்று அவர் இன்ஸ்டாகிராமில், ஒரு ரகசியத்தை டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்தார்.
இது இருவரும் தங்கள் திருமணத்தை தேதியில் அறிவிப்பார்கள் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் சிலர் இது குறித்து கூறுகையில், ரகசியம் உண்மையில் திருமணம் குறித்தல்ல என்றும், அது ஒரு புதிய திரைப்படம் தொரப்பாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக ஹிண்ட் கொடுத்தனர்.
எது உண்மை என்று தெரியாத நிலையில், ரசிகர்கள் பரபரப்புடன் டிசம்பர் 2 ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…