நடிகை சமந்தாவிற்கு உடல் நிலை மோசமானதாக உள்ளது ஊடகங்களில் பரவி வருகிறது. இதனால், ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டு முன்னணி நடிகையாகத் திகழ்பவர் சமந்தா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இன்ஸ்டகிராமில் தான் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டங்களை சந்தித்து வருவதாக கூறினார். மேலும் அதில் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வருவதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில், சமந்தா பற்றிய பேரதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியானது. இதில், சமந்தாவின் உடல் நிலை கடந்த சில நாள்களாக மோசமடைந்து வருவதாகவும், இதனால், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவியது.
ஆனால், இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில் சமந்தா, யசோதா படத்திற்குப் பிறகு, ஹைதராபாத்திற்குச் சென்று ஓய்வெடுத்து வருவதாகவும், மயோசிட்டிஸ் நோயிலிருந்து அவர் குணமடைந்து வருவதாகவும் செய்தியாளர்களுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் படி, அப்பல்லோ மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி சமந்தா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…