தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நாசர், கார்த்தி, விஷால் ஆகியோருக்கு துணை நடிகர் ராஜதுரை என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தென்னிந்திய சங்க மேலாளர் தர்மராஜ் நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தென் இந்திய நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர், பொருளாளராக நடிகர் கார்த்தி, பொது செயலாளராக நடிகர் விஷால் ஆகியோர் சிறப்பாக தங்களது பணியை செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் துணை நடிகர் ராஜதுரை என்பவர் சங்க விதிகளுக்கு புறம்பாக வாட்சப் குழு ஒன்றில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனவே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த ராஜதுரையை கைது செய்யவேண்டும் எனவும், வைரலாகி வரும் அந்த ஆடியோவை நீக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேனாம்பேட்டை காவல் துறையினர் அந்த வாட்சப் குழு ஆடியோவை வைத்து துணை நடிகர் ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…